search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிய உணவு"

    பீல்வாடி உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்து பீல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அருமடல் ரோட்டில் அய்யனார் கோவில் எதிரே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 160 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியானது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கு சமையல் அறையும் கிடையாது. சமையலரும் இல்லை.

    இதனால் இப்பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அரை கிலோ மீட்டர் தூரம் சென்று மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தினமும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதற்காக சாலை யில் தட்டை கையில் ஏந்திக்கொண்டு தொடக்கப்பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் பள்ளியில் சாப்பிட்டு விட்டு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.

    மாணவ-மாணவிகள் தினமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொடக்கப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மழை பெய்யும் போது மாணவ- மாணவிகள் தொடக்கப்பள்ளிக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு வருவதால் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் உணவு இடைவேளையில், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதும், படிப்பது, எழுதுவது என்று தங்களது பணிகளை செய்வார்கள். ஆனால் இதை மாணவர்கள் செய்வதற்கு கூட நேரம் இல்லை. மேலும் மாணவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று சாப்பிட்டு வரும் போது விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக உயர்நிலைப்பள்ளி வளாகத்திலேயே சமையல் கூடம் விரைந்து அமைத்து, சமையலரை நியமித்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மாணவர் களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியன் நரேலா பகுதியில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல் உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலியால் துடித்தனர்.

    இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மூத்த டாக்டர் தெரிவித்தார். உணவில் ஏதாவது விஷ பூச்சி விழுந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கடந்த சனிக்கிழமை டெல்லி கிச்ரிபூரில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 2 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #DelhiMiddayMeal
    மத்தியபிரதேச மாநிலத்தில் எலிகள் இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு நாளும் மதியம் ஊட்டச்சத்து உணவு தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் சாகர் மாவட்டத்தில் உள்ள செம்ராபக் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவுக்குள் 4 எலிகள் செத்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதற்குள் சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு விட்டது. அவர்கள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பாட்டுக்குள் எலி செத்து கிடந்தது தெரிந்ததும் அந்த குழந்தைகளுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களில் 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துணை கலெக்டர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சமையல் ஊழியர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
    ×